என்றென்றும் நன்றியுடன்... தி.க.நேத்ரா, சி.பி.எஸ்.இ மாணவி.
என்றென்றும் நன்றியுடன்... தி.க.நேத்ரா, சி.பி.எஸ்.இ மாணவி. “நண்பனே! ராகவா, நீ எனக்குச் செய்த உதவிக்கு நன்றி!... சொல்ல வார்த்தைகளே இல்லை’’ என்று எங்கோ ஒளித்துக் கொண்டிருந்தது. அந்தக் கால திரைப்படத்தில் கதாநாயகனின் உணர்ச்சி நிறைந்த குரலில்... இவ்வசனம் என் இரு செவிகளையும் துளையிட்டதால், சற்று அதனுள் பயணிக்க முற்பட்டோம். வாருங்கள்! இணைந்தே பயணிக்கலாம்!. இதில், ‘நன்றி’ என்னும் சொல்லும் ‘உதவி’ என்னும் சொல்லும் என்னை ஏதோ செய்தது. அதேசமயத்தில், இச்சொற்கள் நலிந்து வருவது சிந்திக்கக் கூடியதாகக் கருதினேன். இன்று நம்மில் பலருக்கு இக்கட்டான சூழலில் சிலர் உதவி இருப்பர். அவற்றில், நாம் ஒரு சிலருக்காவது உண்மையிலேயே நன்றி சொல்லி, அகமகிழ்வை ஏற்படுத்தி இருக்கிறோமா? என்று சிந்தித்தால் எஞ்சி நிற்பது என்ன என்பது தங்களுக்கே வெளிச்சம். ‘உதவி’ என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒன்று. உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ‘நன்றி’ சொல்ல வேண்டும். குறைபட்சம் நன்றி கலந்த சினேகப் புன்னகையாவது முகத்தில் பிரதிபலிக்க வேண்டும். அப்படிச் செய்தால் அவர்கள் மட்டுமல்ல, நமது மனம் இதமும் மகிழ்ச்சியில் து...