இடுகைகள்

டிசம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதிய புத்தகம் பேசுது | பாரதி புத்தகாலயம் - முனைவர் பலராமன் சுப்புராஜ்

படம்
 புதிய புத்தகம் பேசுது சிறுபத்திரிக்கை உலகில், கருத்தாழம் குறையாமல், இருபத்தோர் ஆண்டுகளாக, மாதம் தவறாமல், வெளிவரும் தமிழ் இலக்கிய இதழ், புதிய புத்தகம் பேசுது. இலக்கியம், அறிவியல், அரசியல், பொருளாதாரம் போன்ற பல்வேறு மனிதக் கூறுகளின் முக்கிய உரையாடல்களை விவாதித்துப் பதிவு செய்து வருகிறது. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும் அறிவியலாளருமான ஆயிஷா நடராஜன் அவர்களை முதன்மை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது.  ச.தமிழ்ச்செல்வன், கமலாலயன், யூமா வாசுகி, போன்ற பல எழுத்தாளர்களை ஆசிரியர் குழு உறுப்பினர்களாகத் தன்னகத்தே கொண்டுள்ளது புத்தகம் பேசுது.  தோழர் நாகராஜன் ஆசிரியராகச் செயல்பட்டுக் கொண்டு வெளியிட்டும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, புதிய புத்தகம் பேசுது ஆகப்பெரும் ஆளுமைகள் மேற்பார்வையில் வெளிவருகின்றது என்பதில் சிறிதும் ஐயமில்லை. சமரசமில்லா, சார்பில்லாச் சமகால அரசியல் பிரச்சினைகளை விவாதித்துச் செல்லும் தலையங்கத்தைத் தாங்கி வருகிறது. வாசகர்களை ஈர்க்கும் வகையில், நூலகாலஜி, மெட்ராஜ் நல்ல மெட்ராஜ், புத்தகக் காதல், நேர்காணல், நூல் அறிமுகம் உள்ளிட்ட சுவையா...

’என்னுள் மாகவி’ - முனைவர் பலராமன் சுப்புராஜ்

படம்
 ' என்னுள்  மாகவி'                                                                                           - முனைவர் பலராமன் சுப்புராஜ் அத்திப் பூத்தாற் போலத்தான் ஏடெடுப்பேன்  கவி ஒன்று எழுத... அந்த அத்தி இன்று பூத்தது  பாரதிக்காக... சொற்குவியலின் குப்பை என்று கவிதையை விமர்சித்த  க.நா.சு கண்முன் நிற்க... 'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ!' எனும் அடியை முழங்கிய மாகவி என்னுள் நுழைந்தது எப்போது? அசை போட்டுப் பார்த்தேன்  மீண்டும் மீண்டும்... சாதிகள் இல்லை என்றானே அப்போதா  இல்லை.. இல்லை.. காக்கை குருவி எங்கள் சாதி என்றானே அப்போதா  இல்லை.. இல்லை.. அச்சத்தை வேரறுத்து ரௌத்திரத்தை ஊட்டினானே அப்போதா  இல்லை.. இல்லை.. இப்படி எப்படியெல்லாமோ எண்ணிப் பார்த்தும்  அவனது நுழைவோ எனக்குப் பிடிபடவில்லை சரி  உன்னைப் புரிந்து கொள...